tamilnadu

img

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் ஆட் ஆன் சேவைக்கான கட்டணம் உயர்வு

போஸ்ட்பெய்ட் இணைப்பில் வழங்கப்படும் ஆட் ஆன் சேவைக்கான  கட்டணத்தை ஏர்டெல் நிறுவனம் உயர்த்தி உள்ளது.

ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஆட் ஆன் சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது குடும்பத்தாரை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி இரண்டாவது இணைப்பாக சேர்த்து  கொள்ளும் வசதி வழங்கி வருகிறது. 

ஏர்டெல் ஆட் ஆன் சேவைக்கான துவக்க விலை ரூ. 149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்சமயம் விலை உயர்வை அடுத்து இதன் விலை ரூ. 249 என மாற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய விலை உயர்வு அமலாகி இருக்கிறது. ஏர்டெல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு கட்டண உயர்வு பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதவிர டேட்டாவுக்கு மட்டும் ரூ. 99 விலையில் ஆட் ஆன் சேவையை ஏர்டெல் வழங்கி வருகிறது.
 

;